Tuesday 22 March 2016

மார்ச்...23
இவர்கள்தான்...இளைஞர்கள்... 

மாவீரர்கள் பகத்சிங்  சுகதேவ்  இராஜகுரு 
இருபது வயதில்.. 
மணமேடை காணவில்லை...
மங்கலநாண் பூணவில்லை..

தூக்குமேடையில் துயில் கொண்டார் 
தூக்கு  கயிற்றில் தூளி கண்டார்... 

இந்தியத் தாயின் விலங்கொடிக்க 
இருபது வயதில் இன்னுயிர் நீத்த..
இறவாப்புகழ் இளைஞர்களை..

இன்றைய தேசத்தின் இளைஞனே..
இதயத்தில்  நினைத்திடு...
இமைகளில்  நனைத்திடு...

No comments:

Post a Comment