Thursday 10 March 2016

 இணைந்த கரங்களில்..  இணைந்த கரம்..

நமது NFTE இயக்கத்தின் 
மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர்.கோலி 
கருத்து வேறுபாடு காரணமாக தனித்து செயல்பட்டார். 

தற்போது... 
தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தாய்ச்சங்கத்தை விட சிறந்த இயக்கமில்லை என்றுணர்ந்து 
மீண்டும் NFTE இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஏப்ரல் மாதம் அவரது NFTBE இயக்கம் நமது NFTEயுடன் இணைந்திடும்.

அதற்கு முன்னோட்டமாக...
7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் இருந்து 
NFTEக்கு ஆதரவாக தனது சங்கம் 
தேர்தல் களத்தில்  இருந்து விலகிக்கொள்கிறது 
என நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளார்.

போரும்.. அமைதியும் என்பது பாடலிபுத்திர வரலாறு..
அதே பாடலிபுத்திரம் என்ற பாட்னாவில்...
நமது மத்திய செயற்குழுவில் கலந்து கொண்டு 
NFTE செங்கொடி காக்க என் செங்குருதியும் தருவேன் என 
தோழர்.கோலி சூளுரைத்த காட்சி 
உற்சாகமிக்க... உணர்வுமிக்க  காட்சி...

இதற்கெல்லாம் காரணியாகச்செயல்பட்டவர்..
அருமைத்தோழர். ஆர்.கே.,  அவர்கள்...

தோழர். RK.கோலி அவர்களுக்கு வாழ்த்துக்களும்...
தோழர் RK அவர்களுக்கு நமது நன்றிகளும் உரித்தாகுக...

No comments:

Post a Comment