Wednesday 17 February 2016

வருத்தம் சொல்லும் வைப்பு நிதி 
  • பிள்ளைகளின் படிப்புக்கட்டணம் 
  • பெற்றோர்களின் மருத்துவச்செலவு 
  • ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை 
  • சுமங்கலி பூஜை 
  • வீட்டு மராமத்து 
என்று எத்தனையோ காரணங்களைச்சொல்லி 
வைப்பு நிதி பட்டுவாடாவிற்கு   விண்ணப்பம் செய்து காத்திருக்கும் அப்பாவிகளின்  கவனத்திற்கு...

ஜனவரி 2016 வரை BSNL ஊழியர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்ட GPF வைப்புநிதி தொகையினை BSNLக்கு அந்தந்த 
மாநில  DOTCELL CCAக்கள் பட்டுவாடா செய்யாதவரை..
 
BSNL ஊழியர்களுக்கு வைப்பு நிதி பட்டுவாடா நடக்க வாய்ப்பில்லை என்று டெல்லி நிர்வாகம் மாநில  தலைமை கணக்கு  அதிகாரிகளுக்கு  
16/02/2016 அன்று  உறுதிபடஅறிவித்துள்ளது. 

இனி வைப்புநிதியை நம்பிப் பலனில்லை....
ஈட்டிக்காரர்களிடம் தஞ்சமடைவதைத்தவிர வழியில்லை...

இதனிடையே நமது 
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்கள் 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச்சந்தித்து உடனடியாக 
வைப்பு நிதியை பட்டுவாடா செய்யச்சொல்லி வற்புறுத்தியுள்ளார் 
என்பது மட்டுமே ஆறுதல் தரும்  செய்தியாகும்.

இப்போதுதான் நமது தோழர்களுக்கு...
பட்டு.. வாடா.. என்பதின் பொருள் புரிகிறது...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகில் குடம் உடைத்துப் பீறிடும்  மழைத்துளி
பனிக்குடம் உடைத்து வீறிடும்  புதுக்குழவி...

கார்முகில்  களித்தாடும் தோகை மயில்..
வாட்டம் போக்கும்   வைப்புநிதித்தொகை..

எப்போ.. வரும்.. எப்படி வரும்...
மனிதா.. உனக்கு அது புரியாது...
மகாதேவனுக்கும் அது  தெரியாது...

புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்று...
கவலை கொண்ட மனதை கவிதை சொல்லி ஆற்று...

No comments:

Post a Comment