Friday 29 January 2016

ஜனவரி - 30 
மகாத்மா மறைவு தினம் 
நாசத்தால் உயிர் நீத்த தேசத்தந்தை 

வீழ்ந்தது... நீயல்ல...
1948 ஜனவரி 30
இந்திய மண்ணில்...
வீழ்ந்தது நீயல்ல..
அகிம்சையும்.. அன்பும்..
கருணையும்.. கனிவும்...

அன்று உன் தேகம்...
அரை நிர்வாணம்... 

இன்று.. உன்  தேசம்..
முழு நிர்வாணம்...

அன்று.. நீ..
அரைநிர்வாணப் பக்கிரி...

இன்றோ... அனைவரும் 
அரை நிர்வாணப் போக்கிரி...

கொடியவர் கரத்தில் கொற்றம்...
கொடிகட்டிப் பறக்குது குற்றம்...

இந்நிலை.. இழிநிலை.. மாற்றுவோம்...  
உன் வலி துடைப்போம்... உன் வழி நடப்போம்...
----------------------------------------------------------------------------------

தியாகிகள் தின விழா 

30/01/2016 - சனிக்கிழமை  - மாலை  04.00 மணி 
தியாகி KMS நூலகம் - தேவகோட்டை 

- : பங்கேற்பு :-
முனைவர்.பழனி இராகுலதாசன் 
நல்லாசிரியர்.  க.குகானந்தம் 
பொற்கிழிக்கவிஞர். அரு.சோமசுந்தரம் 
காப்பியக்கவிஞர். குன்றக்குடி ஆதீனப்புலவர் மரு.பரமகுரு 
மற்றும் வாழும் தியாகிகளும்..  வளரும் தோழர்களும்...

தோழர்களே... வருக.. 

No comments:

Post a Comment