Sunday 13 December 2015

உதவிடும் உள்ளத்திற்கு.. ஓய்வேது?
.வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னையில்
தோழர்.ஆர்.கே., அவர்கள்
உள்ளமுவந்து உதவிகள் வழங்கிடும் காட்சி 

கெடுப்பதுவும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே 
எடுப்பதுவும் எல்லாம் மழை...

வான்புகழ் வள்ளுவன் 
கெடுப்பதுவும் மழை... கொடுப்பதுவும் மழை என 
வான்சிறப்பிற்கு தனி அதிகாரம் அமைத்தான்..

வான் மழையால்  வாழ்வு கெட்ட மனிதனுக்கு 
வாழும் சக மனிதர்கள் கரம் கொடுத்து உதவும் காட்சியை 
நாளெல்லாம் நாம் காணும் போது 
நிலம் ஈரமானதை  விட நம் மனம் ஈரமாகிறது...

அவ்வாறு சக மனிதனின் துன்பம் காணச்சகியா மனிதர்களுள்..
மாமனிதர் தோழர்.ஆர்.கே., ஆவார்..

சென்னையில் துயரப்படும் தோழர்களுக்கு 
நம் தோழர்களுடன் சென்று உதவிக்கரம் நீட்டினார்..

கடலூர் தோழர்கள் நிவாரண வேண்டுகோள் விடுத்தபோது..
முதல் நிதியாக தனது பங்கைச்செலுத்தினார்...

ஜன்னலோரம் அமர்ந்து 
சாலையை வெறித்துப் பார்ப்பவன் மனிதனல்ல...
சங்கடத்தில் சிக்கியுள்ள 
சக மனிதனின் துன்பம்  போக்குபவனே மனிதன்...

அந்த வகையில்...
ஓய்வு பெற்றிருந்தாலும்.. ஓய்வற்று  உழைத்திடும்...
ஒப்பற்ற தலைவருக்கு நம் வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்...

அவர் வழியில்...
ஓய்வு பெற்ற தோழர்களும்..
உழைக்கின்ற தோழர்களும்... 
உணர்வு கொண்ட தோழர்களும்...
உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறோம்...
தங்கள் தடம் பதிக்க வேண்டுகிறோம்...

No comments:

Post a Comment