Wednesday 30 September 2015

புதுவை..  
வாகை சூடிய தோழர்களுக்கு 
வாழ்த்துக்கள் 
29/09/2015 அன்று நடைபெற்ற 
புதுவை மாவட்ட மாநாட்டில்  
புதிய நிர்வாகிகள் தேர்வில் 
கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் 
ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது. 
தோழர். காமராஜ் அவர்களின் தலைமை ஏற்று 
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாவட்டத்தலைவர் : தோழர்.தண்டபாணி 
மாவட்டச்செயலர் :  தோழர்.செல்வரங்கன் 
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான
 புதிய நிர்வாகிகள்  சிறப்புடன் 
செயல்பட  நமது வாழ்த்துக்கள்.
============      =====================      ============

போர் வெறி கொண்ட 
அன்றைய அசோக மன்னன் 
கலிங்க நாட்டில் காட்டாறாய் ஓடிய 
ஆயிரமாயிரம்  வீரர்களின் 
குருதி கண்ட பின்பு 
குற்றம் உணர்ந்தான்..
 போர் வெறி தணிந்தான்..
சங்கம் சரணம் என சரணடைந்தான்.
இது வரலாறு..

அசோக ராஜ்ஜியம் என்பது.. 
எதிர்த்து வாழ்வதல்ல..
எதிரியையும் ஏற்று வாழ்வது...

வரலாற்றிலும்... வாழ்க்கையிலும்...
வாய்மையை....
எதிர்ப்பவர்கள் வீழ்கிறார்கள்..
ஏற்பவர்கள் வாழ்கிறார்கள்...

2 comments: