Sunday 20 September 2015

இரங்கல் 

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
கணக்கு அதிகாரியாகப் பணிபுரியும் 
தோழியர்.தேன்மொழி முருகேசன் அவர்களின் 

அன்புக்கணவர் - தோழர்
சுப.முருகேசன் 

அவர்கள் 20/09/2015 - ஞாயிறு அன்று 
திடீர் உடல் நலக்குறைவால் 
உறங்கும்போதே  இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த வேதனையையும் 
இரங்கலையும்  உரித்தாகுகின்றோம்.

தோழர்.முருகேசன் அவர்கள்
 அமைதியும்.. அன்பும் 
ஒருங்கே அமையப்பெற்ற பண்பாளர்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளாக 
தனது துணைவியாரை 
நாள்தோறும் காலையும் மாலையும் 
அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் 
 கொண்டு வந்து விட்டு..
 மீண்டும் அழைத்துச்செல்லும்..
பணியை தவறாமல் செய்து வந்தார்.

அதனாலேயே நமது தோழர்கள் 
 அனைவருக்கும்  அன்பானவராகவும் 
நெருக்கமானவராகவும் விளங்கினார்...

 ஈடில்லா இழப்பிற்கும், 
அதிர்ச்சிக்கும்  ஆளான..
 தோழியர்.தேன்மொழி அவர்களின் 
துயரத்தில் பங்கு கொள்கிறோம்... 
நாமும்  துயரம் கொள்கிறோம்...
---------------------------------------------------------------------------------
நல்லடக்கம் 21/09/2015  
மாலை காரைக்குடியில் நடைபெறும்.

1 comment: