Saturday 15 August 2015

சுதந்திர தினக் கொடியேற்றம் 
தோழர்.சங்கரன் சுதந்திர தின உரையாற்றுகின்றார்.

காரைக்குடியில்..
சுதந்திர தினத் திருநாளன்று 
நமது சங்கக்கம்பத்தில்..
பாட்டாளிகளின் செங்கொடிக்குப் பதிலாக 
பாரத தேசத்தின் மணித்திருக்கொடி 
பட்டொளி வீசிப் பறப்பது 
தொன்று தொட்ட வழக்கம்...

இந்த ஆண்டும்.. 
சுதந்திர தினக் கொடியேற்றம் 
சிறப்பாக நடைபெற்றது..
அலுவலக கண்காணிப்பாளர் - OFFICE SUPERINTENDENT
மூத்த தோழர்.சுந்தர்ராஜன் அவர்கள் 
தேசத்திருக்கொடியை ஏற்றி வைத்தார்..
விடுதலையின் விலை பற்றியும் 
தேசத்தின் நிலை பற்றியும் 
தோழர்.நாகேஸ்வரன் முழக்கமிட்டார்..

தோழர்.முருகன்,சுபேதார்,மாரிமுத்து,சங்கரன்,துரைப்பாண்டி 
ஆகிய தோழர்கள் சுதந்திரதின கருத்துரையாற்றினர்..
இளநிலைப் பொறியாளர் - JUNIOR ENGINEER 
தோழர்.நெப்போலியன் நன்றி கூற
கொடியேற்று விழா
இனிப்புகள் வழங்கி.. இனிதே முடிந்தது...
விடுப்பு என்னும் சோம்பல் விடுத்து..
கலந்து கொண்ட தோழர்களுக்கு 
வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்..

No comments:

Post a Comment