Monday 3 August 2015

ஓய்வூதியர்கள் நலச்சங்கம் 
காரைக்குடி மாவட்டம் 

பரமக்குடி 
மாவட்டச்செயற்குழு நிகழ்வுகள் 

ஓய்வு பெற்ற தோழர்களின்  
உரிமை காக்கும்  ஒப்பற்ற இயக்கமாம் 
AIBSNLPWA சங்கத்தின் காரைக்குடி மாவட்டச்செயற்குழு மாவட்டத்தலைவர் தோழர்.நாகேஸ்வரன் அவர்கள் தலைமையில் 12/07/2015 அன்று பரமக்குடியில் சிறப்புடன் நடைபெற்றது. 

மாநிலச்செயலர் தோழர்.இராமாராவ் 
கலந்து கொண்டு சிறப்பித்தார். நமது ஆலோசகர் 
நெல்லை அருணா அவர்கள் துவக்கவுரையாற்றினார். 

இயக்கத்தின் தேவை கருதி பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் 
பகுதிகளை உள்ளடக்கி பரமக்குடியில் புதிய கிளை துவங்கப்பட்டது. 

தோழர்.சங்கிலிராஜன் தலைவராகவும் 
தோழர்.காசிநாதன் செயலராகவும் 
தோழர்.இராமசாமி பொருளராகவும் 

ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய கிளைக்கு நமது வாழ்த்துக்கள்.

மாவட்ட மாநாட்டை ஜனவரி 2016ல் 
இராமேஸ்வரத்தில் நடத்துவது எனவும்.. 
உறுப்பினர்கள் அனைவரும் 
ரூ.200/= நன்கொடை அளிப்பது எனவும்.. 
விரைவில் இராமநாதபுரத்தில் புதிய கிளை துவக்குவது  எனவும்..
செயற்குழுவில்  முடிவு செய்யப்பட்டது.

நமது தோழர்கள் 
  • வாடகையில்லா தொலைபேசிக்கு வாழ்வுச்சான்றிதழ் LIFE CERTIFICATE  உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • ஓய்வூதியர்களுக்கான புதிய  அடையாள அட்டையும்..
  • புதிய  மருத்துவ அட்டையும் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை இணைந்த JOINT கணக்குகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • மருத்துவ செலவுகளை  விண்ணப்பித்து ஈடு செய்து கொள்ள வேண்டும்.

சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த 
பரமக்குடி கிளைக்கு வாழ்த்துக்களை 
செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

ஓய்வூதியர் நலன் காப்போம்..
ஓய்வூதியர் நலன் காக்கும் நம் இயக்கம் காப்போம்..

தோழமை வாழ்த்துக்களுடன் 

ந.நாகேஸ்வரன்                                  பெ.முருகன் 
மாவட்டத்தலைவர்                           மாவட்டச்செயலர் 

No comments:

Post a Comment