Sunday 9 August 2015

பணி சிறக்க வாழ்த்துக்கள் 

சென்னையில் ஆகஸ்ட் 5,6 தேதிகளில் நடைபெற்ற 
சென்னைத்தொலைபேசியின் மாநில மாநாட்டில் 
7வது முறையாக 
மீண்டும்  மாநிலச்செயலராகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  
அருமைத்தோழர்
C.K.மதிவாணன் 
அவர்களின் ஓய்வற்ற சங்கப்பணி 
சிறக்க வாழ்த்துகின்றோம்.

ஏராளமான சார்பாளர்கள் பங்கேற்பு 
மகளிரின்  மகத்தான பங்கேற்பு 
பல்வேறு தலைவர்களின் பங்கேற்பு 
இரண்டு மாநில அதிகாரிகளின் பங்கேற்பு 
தோழர்.குப்தாவின் புதல்வரின் பங்கேற்பு 
என பங்கேற்புக்கும்...
பல்வேறு நிகழ்வுகளுக்கும் பெயர் பெற்ற 
சென்னைத் தொலைபேசியின் மாநில மாநாட்டில்
நமது தமிழ் மாநிலச்செயலர் 
அருமைத்தோழர்.பட்டாபி அவர்கள் 
மட்டுமே  அழைக்கப்படவில்லை..
அவர் மட்டுமே பங்கேற்கவில்லை... 
என்பது மட்டுமே மாநாட்டு நிகழ்வுகளில் 
கவளத்தில் கல்லாய் நெருடுகிறது...

ஆகஸ்ட் 13  நடைபெறவுள்ள 
திருச்சி மாவட்ட மாநாட்டிற்கு  
பல்வேறு தோழர்கள் 
பாகுபாடின்றி அழைக்கப்பட்டுள்ளனர்.

சுத்தத்தில் தேசத்திற்கே வழிகாட்டியுள்ள  திருச்சி 
ஒற்றுமைக்கும் வழிகாட்டும் என நம்புவோம்...

கடந்த காலங்கள்.. 
கசந்த காலங்கள்... காலமாகட்டும்..
வருங்காலம்.. 
இனி..  இனிய..  
வசந்த காலமாகட்டும்..

தோழர்.மதிவாணன் அவர்களின்
பணி சிறக்க மீண்டும் வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment