Tuesday 28 July 2015

காலத்தை வென்ற கனவு நாயகன் 
உறங்கும் போது காண்பதல்ல கனவு..
உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு..

இந்திய தேசமே அழுகிறது..
120 கோடி இதயங்களும் துடிக்கின்றன.. 
240 கோடி விழிகளும் நனைகின்றன...
இந்திய தேசமே இடைவிடாமல் அழுகிறது..

நண்பன் இறந்தது போல் நம் இளைஞர்கள் அழுகிறார்கள்.. 
ஆசிரியர் இறந்தது போல் நம் மாணவர்கள் அழுகிறார்கள்...
தந்தை இறந்தது போல் தனயன்கள் அழுகிறார்கள்.. 
தனயன் இறந்தது போல் தாய்மார்கள் அழுகிறார்கள்.. 
சகோதரன் இறந்தது போல் சகலரும் அழுகிறார்கள்..
இந்திய தேசமே இன்று அழுகிறது..

எல்லாவற்றிலும் இரண்டுபடும் நம் இந்திய தேசம் 
இன்று மட்டுமே ஒன்று பட்டு நிற்கிறது...

நேற்றிருந்தார் இன்றில்லை..
இன்றிருப்பார் நாளை இல்லை..
இது வெறும் பழமொழி..

ஆனால் கலாம் என்றுமிருப்பார்..
மக்கள் மனங்களில் வீற்றிருப்பார்...
காலத்தை வென்ற 
கலாம் புகழ் வாழ்க...வாழ்க..

No comments:

Post a Comment