Monday 27 July 2015

கனவு கலைந்தது... 
மனிதம் மறைந்தது... 

இந்திய இளைஞர்களின் இதய நாயகன் 
அப்துல் கலாம் 

இளமையைத் துறந்தவர் 
முதுமையை மறந்தவர் 

இந்தியாவை  நேசித்தவர் 
இளைஞர்களை சுவாசித்தவர் 

அணுசக்தி ஏற்றியவர் 
மனிதசக்தி போற்றியவர் 

எளிமையைத் தூண்டியவர் 
வலிமையை வேண்டியவர் 

சிகையை  மாற்றாதவர்.. 
சிந்தனையின் ஊற்றானவர்.. 

அடக்கம் நிறைந்த மாணவர்  
அறிவு பெருக்கிய ஆசிரியர் 

2020 என தூக்கத்திலும் கனவு கண்டார் 
2015ல் மீளாத்  துயில் கொண்டார்

இராமேஸ்வரத்தின் அன்பு மகன் 
இந்தியத்தாயின் மூத்த மகன் 
அண்ணலுக்குப்பின்
நாம் கண்ட நாயகம் 

அப்துல்கலாம் 

புகழ் ஓங்குக.. 

No comments:

Post a Comment