Sunday 26 July 2015

அஞ்சலி  
வ.உ.சி. வாலேஸ்வரன் 
வ.உ.சி யின் கடைசி மகன் 
வாலேஸ்வரன் 
கப்பலோட்டிய தமிழன் 
செக்கிழுத்த செம்மல் 
வ உ சிதம்பரனாரின் கடைசி மகன் 
வ.உ.சி. வாலேஸ்வரன் 
அவர்கள் மறைவிற்கு 
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
===============================================

வ.உ.சி அவர்களுக்கு 
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர்
 வெள்ளைக்கார நீதிபதி வாலேஸ். 

பிற்காலத்தில்  வ.உ.சி அவர்கள் வறுமையில் உழன்ற போது, 
இந்தியர்கள் வ.உ.சி யை மறந்து அவரை ஒதுக்கியபோது, 
வெள்ளையரான வாலேஸ்
  வ.உ.சியின் தண்டனையைக் குறைக்கவும், 
மீண்டும் வழக்கறிஞர் தொழில் செய்யவும் உதவி புரிந்தார். 
வ.உ.சியின் உற்ற நண்பராகவும் விளங்கினார். 
எனவேதான் வ.உ.சி அவர்கள் செய்நன்றி அறிதலின் பொருட்டு 
தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று திருநாமம் சூட்டினார். 

வெள்ளையனை எதிர்த்துப்போராடிய 
ஒரு வீர மகன் தன்மகனுக்கு 
ஒரு வெள்ளையனின் பெயரைச் சூட்டிய நிகழ்வு
 மாசற்ற மனித நேயத்தின் மறக்கவியலா அடையாளமாகும்.

No comments:

Post a Comment