Thursday 11 June 2015

நீண்ட நாள் கோரிக்கை 
நிறைவேறியது...
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்புச்செயலர்
தோழர்.மாரிமுத்து தனது மனைவி திருமதி.மஞ்சுளாவுடன்
ESI அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் காட்சி. 

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
MALLI SECURITY  என்னும் நிறுவனத்தின் குத்தகையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ESIC  மருத்துவ அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும்  பணி நேற்று நடந்து முடிந்தது. 
ESI அலுவலகத்திலிருந்து நேரடியாக ஊழியர்கள் வந்திருந்தனர். 
ON LINE முறையில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யப்பட்டு உடனடியாக ESI இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
குத்தகை நிறுவனம் ஏற்கனவே தனது ஊழியர்களின் விவரங்களை  
ESI இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது.

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலத்திற்கு அடுத்த தெருவிலேயே 
ESI  மருந்தகம் இருந்தும் அடையாள அட்டை வழங்கப்படாததால் அந்த வசதியை ஊழியர்கள் பயன்படுத்த இயலவில்லை.  ESI மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மிக நீண்ட நாட்களாக எழுப்பி வந்தோம். தற்போதுதான் அது நடந்தேறியுள்ளது. 

விடுபட்டவர்கள் நேரடியாக மதுரை ESI  அலுவலகத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் ஒப்பந்தகாரரிடம் தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் பெற்று அதில் புகைப்படம் ஒட்டி விவரங்களை நிரப்பி 
நிரந்தர அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

MALLI SECURITY  தவிர 
ALERT SECURITY மற்றும் CLEAN CARE SERVICES 
ஆகிய நிறுவனங்களும் காரைக்குடியில் குத்தகை எடுத்துள்ளன. அவர்களின் கீழ் பணிபுரியும் தோழர்களுக்கும் அடையாள அட்டை  வழங்குவதற்கான நமது முயற்சி தொடரும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு விரைவில் அடையாள அட்டையும், 
EPF கணக்கிற்கான UAN  என்னும் UNIVERSAL ACCOUNT NUMBERம் வழங்கப்பட வேண்டும் என குத்தகைக்காரரிடம் வலியுறுத்தியுள்ளோம். 
இம்மாதமே மேற்கண்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க  
குத்தகைக்காரர் உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment