Thursday 7 May 2015

மறக்கப்படுகிறாரா? மார்க்ஸ்..
மாறும் விதி தந்த மார்க்ஸ் 
மாறாத உலகில்..
எல்லாம் மாறும்... 
என்னும் விதி சொன்னவர் மார்க்ஸ்...

பாட்டளிகள்.. தங்கள் 
கால் சங்கிலி அகற்றி..
கழுத்துக்கு சங்கிலி அணியும்.. 
கவுரவ நிலை தந்தவர்.. 
கார்ல் மார்க்ஸ்..

மே 5 அவரது 197வது  பிறந்த நாள்..
படிக்கப் படிக்க பரவசம் தருவது 
பாட்டாளிகளின் தோழர்.மார்க்சின் வரலாறு..

மே 5 அன்று....
பத்திரிக்கைகளைப்  புரட்டிப்புரட்டிப்  பார்த்தோம்...

அநாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் 
ஹன்சிகாவின் அடிமனசு அழகாக சொல்லப்பட்டிருந்தது..

அந்தக்கால கனவு  நாயகன் 
பி.யு.சின்னப்பாவின் பிரதாபங்கள் 
பிரமாதமாக சித்தரிக்கப்பட்டிருந்தது...

அன்புமணி ஸ்டாலின் சண்டை 
அமர்க்களப் படுத்தப்பட்டிருந்தது..

எங்கே.. நம் மார்க்ஸ்...
தேடி தேடிப் பார்த்தோம்...
எங்கும் தென்படவில்லை...

அன்பு வழி சொன்ன...
புத்தனும் ஏசுவும் இராமனும் 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 
துதிக்கப்படுகிறார்கள்..

சமத்துவ வழி சொன்ன 
பொதுவுடைமை நாயகன் 
போற்றப்படாமல் போனது ஏன்?

வெறுத்த  மனசோடு...
வீதியில் சென்று கொண்டிருந்தோம்..
கண்ணில் கண்ட காட்சி..
நம் நெஞ்சை நிறைத்தது...

அடிமைச்சங்கிலி அகற்றிய 
அருமைத்தோழர்.மார்க்ஸ் புகழ் வாழ்க..
புரட்சிகர  வாழ்த்துக்களோடு...
துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் - AITUC 
என்னும் சுவரொட்டிகள் வீதி நிறைத்திருந்தன..
நம் மனதையும் நிறைத்தன...

பாட்டாளி வர்க்கத்தலைவனை 
பாழும் பத்திரிக்கைகள் மறக்கலாம் 
பாட்டாளிகள் மறக்கமாட்டார்கள்...
பாட்டாளிகள் பாரினில் உள்ளவரை.. 
ஓங்கட்டும்.. உயரட்டும்... மார்க்ஸ் புகழ்.. 

No comments:

Post a Comment