Monday 11 May 2015

வாழ்க... வளைக.. 

காசு பணத்திற்கு கடுகளவும்...
அடிபணியாத நீதித்தராசு..
அண்ணல் காந்தி படம் போட்டதனால் 
அடி பணிந்து விட்டது போலும்...

எத்தனை நாள்தான்.. 
நிமிர்ந்து நிற்கும் நீதித்தராசு..

நீதி எப்போதாவது வெல்லும்.. 
நிதி எப்போதும் வெல்லும்..
நியாயம் புரிந்தது..
நம் நீதித்தராசு..

நெடிலாக இருந்த நீதித்தராசு..
குறிலாக மாறி குதூகலம் கொண்டது...
வாழ்க... வளைக.. நீதித்தராசு..

No comments:

Post a Comment