Monday 4 May 2015

மே 5
மாமேதை மார்க்ஸ் 
பிறந்த நாள்  
சுரண்டலை எதிர்த்தவன்
யாரும் சுரண்ட முடியாதவன்  
மண்ணுலகில்....மார்க்ஸ் பிறந்தார்...
படைப்பாளிகளாக இருந்த பாட்டாளிகள் 
படிப்பாளிகளாக மாறினார்கள்...

அரிவாள் சுத்தியல் ஏந்தினார்கள்..
அறிவால் உலகை சுத்திகரித்தார்கள்..

தத்துவத்தை  விதைத்தார்கள்..
சமத்துவத்தை வளர்த்தார்கள்...

சுதந்திரம் போற்றினார்கள்...
சுரண்டலை எதிர்த்தார்கள்..
சுய தன்மை கொண்டார்கள்..

மண்ணில் மனிதன் சுரண்டப்படும் வரை 
மார்க்ஸ் இருப்பார்...
மார்க்ஸ் உள்ளவரை..
மனிதன் இருப்பான்...
வாழ்க மாமேதை... மார்க்ஸ்..

No comments:

Post a Comment