Sunday 10 May 2015

முழு ஓய்வூதியம் 
நீதிமன்றத்தீர்ப்பு 

ஏசுபிரான் 33 ஆண்டுகள்  உயிர் வாழ்ந்தார்  என்பதனால் 
33 ஆண்டுகள் சேவையே முழுமையான பணி என்று 
அன்றைய ஆள்வோர்களால் நிர்ணயம் செய்யப்பட்டு..
மத்திய அரசுப்பணிகளில் 33 ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே 
முழுமையான  ஓய்வூதியம் வழங்கப்பட்டு  வந்தது. 

மத்திய அரசு ஊழியர்களின் தொடர் வலியுறுத்தலால் 
20 ஆண்டுகள் பணி புரிந்தால் 
முழுமையான ஓய்வூதியம் வழங்கப்படும் என 
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை செய்தது. 
அந்த முடிவு 01/01/2006 முதல் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால் 01/01/2006க்கு முன் ஓய்வு பெற்று 
33 ஆண்டு கால பணி நிறைவு செய்யாத  தோழர்கள் 
குறைவான ஓய்வூதியம் பெற்று வந்தனர்.
அவ்வாறு பாதிப்புக்குள்ளான தோழர்கள் 
வழக்கு மன்றம் சென்றனர். 
தற்போது இந்த வழக்கில் 
டெல்லி முதன்மை தீர்ப்பாயம் CAT  தீர்ப்பு அளித்துள்ளது.

அதன்படி 
01/01/2006க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களும் 
20 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் அவர்களுக்கும் 
முழுமையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என 
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

நமது பகுதிகளில்...
நீண்ட நாட்கள் மஸ்தூராகப் பணி புரிந்து 
வயது வரம்பு தளர்வு பெற்று.. 
RM ஆகப் பணி நிரந்தரம் பெற்று 
01/01/2006க்கு முன் ஓய்வு பெற்ற 
பல தோழர்களுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கும்...

20 ஆண்டுகள் பணி புரிந்தால் 
முழு ஓய்வூதியம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டாலும்..

இன்னும்...
33 ஆண்டுகள் பணி புரிந்தால்தான் 
முழுமையான பணிக்கொடை
GRATUITY  வழங்கப்படுகிறது.

இது ஓய்வு பெறும் மூத்த தோழர்களுக்கு 
இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்..

7 ஆண்டு 10 ஆண்டு மஸ்தூர் நிரந்தரத்தின் மூலம் 
பணி நிரந்தரம் பெற்ற தோழர்கள் பணி நிறைவு அடையும் காலமிது.
அத்தகைய தோழர்களுக்கு 33 ஆண்டு நிரந்தரப்பணி என்பது கிடையாது.
எனவே அவர்களுக்கு...
முழுமையான பணிக்கொடை கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே ஓய்வூதியத்தைப்போலவே..
முழுமையான  பணிக்கொடைக்கும் 
20 ஆண்டுகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்...

பணி ஓய்வு பெற்றவர்களும்...
பணியில் இருப்பவர்களும் 
இணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரமிது...

No comments:

Post a Comment