Sunday 12 April 2015

NFTE 
சிவகங்கை மாவட்ட செயற்குழு 
சிவகங்கை தொலைபேசி நிலையம் முன்பு செயற்குழு  தோழர்கள் 
தோழர்களே...
வீரத்தாய் வேலு நாச்சியார் அவதரித்த... 
மருது சகோதரர்கள் என்னும் தீரர்கள் வாழ்ந்த..
சீர்மிகு  சிவகங்கைச்சீமையிலே...
நமது NFTE மாவட்டச்செயற்குழு சிறப்புடன் நடந்தேறியது.
நமது வழிகாட்டி தோழர்.சேது அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நீண்ட நாள் தேங்கிக்கிடக்கும்
நிரந்தர ஊழியர் பிரச்சினைகள்...
ஓய்ந்த நிலையிலும் BSNLஐ   
ஒட்டச்சுரண்டும் உன்மத்தர்கள்..

ஒப்பந்த ஊழியர்களிடம் கூட 
சில்லறை அடிக்கும் கல்லறை மனிதர்கள்..
SIDE BUSINESS சல்லாப அதிகாரிகள்....
இருந்தும் இல்லாத மாவட்ட நிர்வாகம்..
மெல்லச்சாகும் BSNL சேவை...

என தோழர்கள் தங்கள்  வேதனையை 
கோபத்தை செயற்குழுவில் வெளியிட்டனர்.

எனவே...காரைக்குடி மாவட்டத்தில்..
ஒப்பந்த ஊழியர்களுக்கு
தொடர்ந்து இழைக்கப்படும் வஞ்சனை தடுத்திடவும்..

நிரந்தர ஊழியர் உரிமைகளும்..
நிர்வாகத்தின் அக்கறையும்..
நிறுவனத்தின் சேவைகளும்...
கோமா நிலையில் இருக்கும் 
கொடுமை அகற்றிடவும் 

05/05/2015  செவ்வாய்க்கிழமை அன்று 
காரைக்குடி பொது மேலாளர் அலுவலகத்தில் 
அறப்போர் 
புரிந்திட செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது..

விதியே என நொந்து கிடக்க மாட்டோம்..
நிறுவனம் காக்க.. நமது உரிமைகள் காக்க 
வீதியில் இறங்கிப் போராடுவோம்...
வீறு கொண்டு வாரீர்.. தோழர்களே...

2 comments:

  1. போராட்டம் மட்டுமே முடிவை தரும் போராடுவோம் வெற்றி பெருவோம்

    ReplyDelete
  2. போராட்டம் மட்டுமே முடிவை தரும் போராடுவோம் வெற்றி பெருவோம்

    ReplyDelete