Monday 20 April 2015

முனைப்புடன்... முன்னேறு...
ஏப்ரல் 21 & 22
அகில இந்திய வேலை நிறுத்தம் 

நாளையும்.. இன்றும்..
நாடு காக்கும் போராட்டம்.... 
நமது BSNL காக்கும் போராட்டம்... 

நிறுவன முடக்கம் நீங்கிவிட.. 
நித்தப்பணியை நீயும் முடக்கி விடு...

பணி செய்யும் பாதகனை மறித்து விடு...
பார்வையால் கோழைகளை எரித்து விடு...

மருத்துவ விடுப்பில் மரித்து விடாதே...
மனக்குரங்கு பாதையில் சென்று விடாதே..

வியாதியஸ்தனைக்கண்டு வெம்பி விடாதே..
நோயாளிகளைக் கண்டு நொந்து விடாதே...

உப்பிட்ட தாய்க்கு கொடிய துயரம் என்றால்.. 
விரலை சப்பிட்டு நீயும் வேடிக்கை பார்த்திடாதே..

கால்களை விறைத்து முன்னேறு...
கரங்களை உயர்த்திப் போராடு..

காலம்  ஒரு நாள் கட்டாயம்  வெல்லும்...
சந்ததி  உன் பெயர்  மகிழ்ந்தே சொல்லும்..

2 comments:

  1. தோழனே போராட்டம் என்பது பணிக்கு செல்லாமல் இருப்பதல்ல மக்கள் மூலம் செவிடனாய் திரியும் அரசுக்கு உணா்த்தி பொதுத்துறையாம் நம் நிறுவனத்தை பாதுகாப்போம்

    ReplyDelete
  2. தோழனே போராட்டம் என்பது பணிக்கு செல்லாமல் இருப்பதல்ல மக்கள் மூலம் செவிடனாய் திரியும் அரசுக்கு உணா்த்தி பொதுத்துறையாம் நம் நிறுவனத்தை பாதுகாப்போம்

    ReplyDelete