Sunday 19 April 2015

ஏப்ரல் 21 & 22 போராட்டம் 
20 அம்சக்கோரிக்கைகளின் 
இன்றைய நிலவரம் 

நமது கூட்டமைப்புத்தலைவர்கள் 
CMDயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 
நமது இருபது அம்சக்கோரிக்கைகள் மீதான
 நிர்வாகத்தின் நிலை  கீழே அளிக்கப்பட்டுள்ளது.
இன்று 20/04/2015 காலை 11 மணியளவில் 
நமது கூட்டமைப்புத்தலைவர்கள்  கூடி 
நாளைய போராட்ட திட்டம்  பற்றி விவாதிப்பார்கள்.

BSNL  பரிசீலித்துகொண்டிருக்கும் 
பிரச்சினைகளின் நிலவரம் 

  • BSNLலில் பணி அமர்த்தப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிப்பது விரைந்து முடிவெடுக்கப்படும்.
  • ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION அளிப்பது பற்றி முடிவு செய்ய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • ITI நிறுவனத்தின் மூலம் 20 சத உபகரணங்கள் மட்டுமே வாங்கப்படும். மேலும் இதற்காக எந்த முன்பணமும் ITIக்கு வழங்கப்படவில்லை.
  • அரசிடமிருந்து BSNLக்கு  வரவேண்டிய  6000 கோடி அலைக்கற்றை பணம் ஆண்டுக்கு 2000 கோடி என்ற அளவில் அரசுக்கு நாம் செலுத்த வேண்டிய LICENSE FEE கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும்.
  • BSNL விரிவாக்கத்திற்காக 7000 கோடி வங்கிகளிடமிருந்து கடன் வாங்க DOT தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • OFC வழித்தடங்களை விரிவு படுத்துவதற்காக 4000 கிலோமீட்டர் OFC  கேபிள் BBNL நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது. OFC பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய புதிய மென்பொருள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
  • நிறுவனத்திற்கு புதிய ஆளெடுப்பு தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
  • DELOITTEE குழு முடிவின் பாதகங்கள் பரிசீலிக்கப்படும்.

அரசு முடிவு செய்ய வேண்டிய பிரச்சினைகள் 

  • கிராமப்புற சேவைகளுக்கான சன்மானம் வழங்குதல் 
  • BSNL  துணை நிறுவனங்கள் உருவாக்கத்தை நிறுத்துதல் 
  • BSNL மற்றும் MTNL நிறுவன இணைப்பை நிறுத்துதல்.
  • 1.2MHz அலைவரிசையை திருப்பி தரக்கோரும் TRAI பரிந்துரையை ரத்து செய்தல் 
  • இயக்குனர் காலியிடங்களை நிரப்புதல் 
  • சொத்துக்களை BSNLக்கு பெயர் மாற்றம் செய்தல் 
  • BSNL சேவையை அரசு இலாக்காக்களில் கட்டாயமாக்குதல் 
  • இலவச அலைக்கற்றை ஒதுக்கீடு 
  • அலைவரிசையை பயன்படுத்தும் அதிகாரத்தை  BSNLக்கு வழங்குதல் 
  • 4 G சேவை வழங்க அனுமதி 
  • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல் 
  • ஓய்வு பெறும் தோழர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் 

தோழர்களே...
உப்பிட்ட  நிறுவனத்தை..
உயிர் உள்ளளவும் நினைப்போம்...
நம் வாழ்வை வளமாக்கிய..
நமது நிறுவனத்தை வலுவாக்கிட.. 
நமது போராட்டத்தை வலுவாக்கிடுவோம்... 
நாளை நமதே... எந்த நாளும் நமதே...

No comments:

Post a Comment