Wednesday 18 March 2015

மென்பொருளாயினும் 
மெய்ப்பொருள் காண்பதறிவு 
E R P 
ERROR  RECURRING  PROGRAM 

தோழர்களே...
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது பழமொழி.
அது முற்றிலும் ERP விவகாரத்திற்குப் பொருந்தும்.
நல்லா இருந்த HRMSஐ கழற்றி விட்டார்கள்.
நாசம் பெருகும் ERPஐக்  கொண்டு வந்தார்கள்...
காலம் காலமாக நாம் உருவாக்கி வைத்த விதிகள்
காற்றிலே பறந்து விட்டன.
சாப்ட்வேர் வைத்ததே இப்போது சட்டமாகிப் போச்சு.
பல்வேறு விவகாரங்கள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளன.
பிரச்சினைகளை சுட்டிக்காட்டினால்
இது பல் முளைக்கும் பருவம்
TEETHING PROBLEM என்று கூறுகின்றார்கள்.
நமக்கோ பல் விழும் பருவம் .
எனவே  தாங்க  முடியவில்லை பல் வலியை...
ஒன்றா.. இரண்டா... 32 ஆச்சே...

எனவேதான் தமிழ் மாநிலச்சங்கம்
தமிழகம்  தழுவிய 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை
19/03/2015 அன்று நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

நமது ஆர்ப்பாட்டம் வழியாக நாம்..
நமது வலிகளைச்  சொல்லிடுவோம்.
நல்ல வழிகளை நிர்வாகம் திறக்கட்டும்...

ERP  இம்சைகளில் சில...

UNIONS, CONTRACTORS,SUPPLIERS, LANDLORDS 
ஓய்வு பெற்றவர்கள்... மரித்தவர்கள்..
மரித்தவர்களின் வாரிசுகள்.. .என 
ERP யில் எல்லோரும் VENDORகளே...
எனவேதான் 
ஒப்பந்த ஊழியரும் ஒப்பந்தகாரனும்..
ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர்.

ஓய்வு பெறப்போகும் தோழர்களின்

LAST PAY CERTIFICATE - LPCயில் 
SUPERANNUATION என்பதற்குப் பதிலாக 
RESIGNATION என்றே உள்ளது. 
பொருத்தமற்ற தனியார் நிறுவன சொல்லாடல்கள் பல  
ERPயில் அப்படியே காப்பியடிக்கப்படுகின்றன...

ERPயில் தற்போது இடைக்கால பில் பட்டுவாடா 

Supplementary bill என்பதே கிடையாது.. 

GPF விண்ணப்பம் ERP மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும் என கூறினார்கள். ஆனாலும் இன்று வரை வெள்ளைப் பேப்பரில்தான் விண்ணப்பம் செல்கிறது. GPF இருப்புக்கணக்கு என்பது  துரும்பாய் இளைக்கிறது.  மனம் இரும்பாய் கணக்கிறது.


ஓய்வு பெறும் தோழர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் அன்றே விடுப்புச்சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மிகுந்த தாமதத்திற்கு உள்ளாகிறது. மரணமுறும் தோழர்களின் குடும்பங்களுக்கு மறுகணமே  விடுப்புச்சம்பளம்  வழங்கப்பட்டு அவர்களின் துயர் சிறிதேனும் குறைக்கப்பட்டது. ஆனால் ERPயில் ஓய்வூதியத்திற்குப்   பின்புதான் விடுப்புச்சம்பளம் வருகின்றது. 

ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது இலாக்கா கடன்கள் ஏதுமிருந்தால் அவரது பணிக்கொடையில் GRATUITY யில் பிடித்தம் செய்யப்படும். ஆனால் ERPயில் விடுப்புச்சம்பளத்தில்தான் பிடித்தங்களை செய்ய வேண்டும் என SOFTWARE சண்டித்தனம் செய்கிறது.

ERP நடைமுறைக்கு வந்த பின் மருத்துவ பில்கள் மிகுந்த தாமதத்திற்குள்ளாகி விட்டன. பணியில் உள்ள ஊழியர்கள் ERPயை பயன்படுத்தி பில்களை அனுப்புகின்றனர். ஓய்வு பெற்றோருக்கு வழியில்லை.

காசளர்களுக்கு CONVEYANCE  ALLOWANCE போட முடிவதில்லை. பயணப்படி, LTC ஆகியவற்றின் நிலையும் இதுதான்.

ஒரு எழுத்தர் விண்ணப்பிக்கும் விடுப்பு GM அனுமதிக்கு செல்கிறது. இது MAPPING செய்வதில் வந்த கோளாறு. இது சரி செய்யப்பட வேண்டும். மேலும் விடுப்புக்கணக்கு விடை காண முடியாத பிணக்காக சிலருக்கு உள்ளது.

ஊழியர்களின் சொந்த விவரங்கள், பணிக்கால விவரங்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ஆகியவை மனம் போன போக்கிலே ERP யில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வருமான வரி, தொழில்வரி போன்ற வரிப்பிடித்தங்களில் 
வரிக்கு வரி குழப்பம் விளைகிறது.

கடன்களைப் பொருத்தவரை கடன் முடிந்த பின்னும் பிடித்தம் தொடர்கிறது. இது போலவே LIC, PLI  போன்ற ஆயுள் காப்பீடுகள் முதிர்வடைந்தாலும்    பிடித்தங்கள் மீண்டும் தொடர்கிறது.  நம்மை ERP க்கு ரொம்ப பிடித்துப்போனதே காரணமாகும்.

சங்கப்பிடித்தத்தில் எந்த சங்கத்தை சேர்ந்தவர் என்ற குறிப்பு இல்லை. யாதும் சங்கம் யாவரும் உறுப்பினர் என்பது பின்பற்றப்படுகிறது. மனமகிழ் மன்ற பிடித்தங்களில் ADDITIONAL RECOVERY  கூடுதல் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

தோழர்களே...
ERP இம்சைகளை இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். கடைசியில் சலிப்புத்தான் மிஞ்சும்.

அதெல்லாம் சரி ... 
பல ஆயிரம் கோடிகளைக்கொட்டி 
இந்த ERP நடைமுறைக்கு வந்துள்ளதே...
ஒரு பிரயோசனமும் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது..
ERPயிலும் பலன்கள் உண்டு... 
அதே சமயம் அவஸ்தைகளும் உண்டு...
பலன்கள் பெருக வேண்டும்... 
அவஸ்தைகள் குறைய வேண்டும்...
இதுவே நமது எதிர்பார்ப்பு...

நாம் தொழில்நுட்பத்தை நிச்சயம் வரவேற்கிறோம்...
ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகளை
சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இல்லறமே நல்லறம் என்றார் வள்ளுவர்...
அந்த இல்லறத்துணை கோளாறாக அமைந்து விட்டால் 
நல்லறம் நரகமாக மாறி  விடும்...
அதே நிலைதான் ERP யிலும்...


எனவே நாம் அன்றாடம் 
அல்லல்படும் பிரச்சினைகளை 
நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்ட 
இன்று 19/03/2015 காலை 
காரைக்குடி  பொதுமேலாளர் அலுவலகம் 
முன்பு கூடிடுவோம்.. 
வாரீர்... தோழர்களே...

No comments:

Post a Comment