Monday 23 March 2015

அறப்போர் 

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். 
உரிய தேதியில் சம்பளம் இல்லை...
சட்டரீதியான சலுகைகள் இல்லை..

காரணம்...
தொழிலாளரை சுரண்டிப் பிழைப்பதற்காகவே 
அவதாரம் எடுத்துள்ள குத்தகைக்கரர்களும்..
அவர்கள் போடும் சிறு.. சிறு...
எலும்புத்துண்டுகளுக்காக 
ஏங்கி நிற்பவர்களுமே...

தற்போது காரைக்குடியில் 
MALLI SECURITY என்ற குத்தகைக்காரனுக்கு 
இலாக்கா விதிமுறைகளை மீறி 
தற்காலிக ஏற்பாடு என்னும் பெயரில் 
குத்தகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த MALLI SECURITY  கடந்த இரண்டு வருடங்களாக 
இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதியில் 
காவல் பணிக்கு குத்தகை எடுத்து...
காவல் பணி செய்யும் ஊழியர்களிடம் 
மாதம் 1000 ரூபாய் கூலியைக்  குறைவாக கொடுத்து 
கொள்ளையடித்துக் கொண்டிருப்பவன்...
இதனை நாம் சுட்டிக்காட்டியும் 
வழக்கம் போல் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை...
அத்தகைய குத்தகைக்காரனுக்கு 
HOUSE KEEPING குத்தகையை விதிமீறி 
கொடுத்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்... சென்ற பிப்ரவரி மாத சம்பளம் 
இம்மாதம் 26/03/2015க்குள்  
MALLI SECURITY மூலம் வழங்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

நமது கோரிக்கை...

  • ஏற்கனவே காவல் பணிகளில் கடந்த இரண்டு வருடங்களாக குறைத்துக்கொடுக்கப்பட்ட கூலியை திருப்பித்தரவேண்டும்...
  • தற்போதைய குத்தகையில் உரிய கூலி கொடுக்க வேண்டும்...
  • EPF,ESI,BONUS உள்ளிட்ட சலுகைகளை தவறாது கொடுக்க வேண்டும்..
  • நிர்வாகம் ஒத்துக்கொண்டபடி பிப்ரவரி மாத சம்பளத்தை 26/03/2015க்குள் வழங்க வேண்டும்..
  • வருகின்ற மாதங்களில் சம்பளத்தை 5ந்தேதிக்குள் வழங்க வேண்டும்..
ஒத்துக்கொண்டபடி 26/03/2015க்குள் 
சம்பளம் வழங்கவில்லை என்றால் 
27/03/2015 முதல் 
அறப்போர் 
துவக்க தோழர்களே.. தயாராவீ ர்...

No comments:

Post a Comment