Wednesday 25 February 2015

நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற நமது பேரணி 
பனி உறங்கும் காஷ்மீர் முதல் அலை உறங்கா குமரி வரை
 பணி செய்யும் தோழர்கள்  தலைநகரில் சங்கமித்த காட்சி 


 இடர்ப்பாடு களைவோம்...
வேறுபாடு மறப்போம்.. என...
  வீதி இறங்கிய தலைவர்கள் கூட்டம் 

BSNL காத்திட...
தேசம் காத்திட..
பொதுத்துறை நாசம் தடுத்திட 
அலைவாய் முதல் மலைவாய் வரை
பணி செய்யும் 5000க்கும் அதிகமான தோழர்கள் 
தலைநகர் டெல்லியில் 25/02/2015 அன்று 
தலைமையிடமாம் நாடாளுமன்றம் நோக்கி 
தலைவர்கள் வழி நடத்திட..
ஓன்று திரண்டு,, ஓரணியாய் சென்று 
பிரதமர் அலுவலகத்தில் லட்சக்கணக்கான கையெழுத்து 
பிரதிகளை சமர்ப்பித்துள்ளனர்...

நாளொரு ஆடையும்...
பொழுதொரு மேடையுமாக உள்ள 
நம்மை ஆள்வோர்கள் 
நமது கோரிக்கைகளை செவி மடுக்க வேண்டும்...
நம்மைத் திரும்பி பார்க்க கூட நேரமில்லையெனில் 
மார்ச் 17 காலவரையற்ற வேலை நிறுத்தம்,,
கட்டாயம் இவர்கள்
கண்களையும் காதுகளையும் திறக்கும்...

No comments:

Post a Comment