Tuesday 24 February 2015

அஞ்சலி 
ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில்...
தோழர். இ. மாயாண்டி பாரதி 

கதரால் கவரப்பட்டார்..
காவியால் ஈர்க்கப்பட்டார்..
கடைசி வரை..
பொதுவுடைமையில் இணைக்கப்பட்டார்..
இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம்...
இவருக்கோ  13 ஆண்டுகள் சிறைவாசம்..

ஏறினால் ரயில்..
இறங்கினால் ஜெயில்..
என்பதே அன்றைய வாழ்க்கை...

தேச விடுதலைக்காக.. இளமையில்..
தேகம் வருத்திப்  போரிட்டார்..
தேச நலனுக்காக.. முதுமையில்.. 
தேகம் இளைத்த போதும் பாடுபட்டார்...

மதுரைப்பகுதியில்..
மலை முழுங்கி மகாதேவன்களை...
கிரானைட் கிங்கரர்களை...
எதிர்த்துக் களம் கண்டார்..

நூறாண்டுக்கு இன்னும் 
ஈராண்டு இருக்கையிலே..
இன்னுயிர் நீத்தார்..

தோழர்.மாயாண்டி பாரதி 
அவர்கள் மறைவிற்கு 
செங்கொடி தாழ்த்திய அஞ்சலி .

No comments:

Post a Comment