Tuesday 17 February 2015

குடந்தை மீத்தேன் போராட்டம்..
குவிந்தன.. போராட்டத் தேனீக்கள்...
சொல்லில் உழவு செய்து.. நெஞ்சில் வீரம் விதைக்கும்
தோழர்.சுப்பராயன் - AITUC  மாநிலத்தலைவர் உரையாற்றுகின்றார்

17/02/2015  
கோவில்களின் நகரம் குடந்தையில்..
அண்ணல் காந்தி பூங்காவில்...
அணிவகுத்தனர் தோழர்கள்...அலை அலையாய் 
அரக்கன் மீத்தேன் உருவாக்கத் திட்டம் அழித்திட 

பொங்கும் காவிரியாய் தோழர் ஆர்.கே.,  பொங்கிட..
பசுமை நினைவுகளை.. பாழும் மீத்தேன் அபாயங்களை... 
பட்டாபி அவர்கள் பாங்காய் பகர்ந்திட..
குணக்குன்று குடந்தை ஜெயபால் கொடுமை எதிர்த்துக் குமுறிட..

தோழர்.சுப்பராயன் 
போராடும் நம் இயக்கம் பாராட்டி...
சொல்லால் நெஞ்சில் துளையிட்டு...
மீத்தேன்வாதிகளின் சுரண்டல் கொடுமை சொல்லிட..

தளங்களில் போராடும்  தளபதிகள்...தலைவர்கள்...
தன்மானத்துடன் உரை நிகழ்த்திட...
தோழியர்கள்...தோழர்கள்.. 
போராட்டப்பூங்காவில் 
தேனீக்களாய்  குவிந்திட...

நமக்காக மட்டும் வாழ்ந்திடாது..
நாட்டுக்கான பிரச்சினையிலும்..
முனை நின்ற.. முனை நிற்கும்..
தொழிலாளர் வர்க்கத்தின் கூர்முனையாம்..
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத்தின்..
பாரம்பரியம்  பாராட்டி... பாங்குடன் முடிந்தது..
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்....

குழப்பங்களை சீராக்கும்... 
கோணல்களை நேராக்கும்... 
கும்பகோணத்திற்கு நமது வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment