Thursday 8 January 2015

சிவகங்கை...
ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...
தொடர் நிகழ்ச்சி...

அதிகார வர்க்கத்தின் செவிப்பறையில்
நம் கோரிக்கைகள் சென்றடைந்திட
அதிகாரிகள் சங்கச்செயலர் கையெழுத்திடும் காட்சி.. 

சிவகங்கைச் சீமையில்...
ஒரு கோடி கையெழுத்து தொடர் நிகழ்ச்சி 
தொலைபேசி நிலையத்தில் 08/01/2015 அன்று 
சிறப்புடன் நடைபெற்றது.
AIBSNLOA மாவட்டச்செயலர் தோழர்.குமார் அவர்கள் 
கூட்டத்தலைமையேற்று முதல் கையெழுத்திட்டு 
கையெழுத்து தொடர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்...
NFTE, BSNLEU  மாவட்டச்செயலர்கள் கலந்து கொண்டனர்.
SNEA  சார்பாக தோழர்.முருகானந்தம்,DE
BSNLEU சார்பாக தோழர்கள்.பன்னீர்செல்வம்,மனோகரன்
NFTE சார்பாக தோழர்கள்.விநாயகம்,ஆனந்த்,முருகன் 
இளைஞரணி  சார்பாக தோழர்கள்.சுபேதார் அலிகான்,தமிழ்மாறன் 
ஓய்வு பெற்ற தோழர்கள் சார்பாக தோழர்.சந்திரன் 
ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
ஒப்பந்த ஊழியர்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும்.. நன்றிகளும்...

AIBSNLOA சங்கம் கூட்டமைப்பில் இல்லாத நிலையிலும் 
அதன் மாவட்டச்செயலர் தோழர்.குமார் போராட்டத்திற்கு 
ஆதரவு தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. 
கூட்டமைப்பு தலைவர்கள் AIBSNLOA சங்கத்தை அகில இந்திய அளவில் அணுகி கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு.
அணில்கள் கூட  அநீதிக்கு எதிராய் 
ஆர்ப்பரித்து பணி புரிந்த கதை இங்குண்டு...
அணில்களைக்கூட ஆண்டவன் ஒதுக்கவில்லை...
அணிகளை நாம் ஒதுக்கலாமா?

1 comment: