Tuesday 20 January 2015

 
 வைப்புநிதி வானிலை அறிக்கை


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்   
வைப்பு நிதி மழை பெய்ய வாய்ப்பு...

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
 வைப்பு நிதி மன அழுத்த தாழ்வு நிலையால் 
டெல்லி மற்றும் சென்னையில்
வெப்பச்சலனம் உண்டாகி...

இன்னும் 48 மணி நேரத்தில் 
வைப்பு நிதி மற்றும் ஒப்பந்த ஊழியர் கூலியுடன்
 கூடிய  பில்மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
வைப்பு நிதி வானிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
  இன்னும் இரண்டு நாட்களில் 
பில்மழை பெய்யத்தவறினால்
 புயல் சின்னம் உருவாகும் வாய்ப்புள்ளதாக
கோபம் கொண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
நேற்றே மழை பெய்ய வாய்ப்பிருந்ததாகவும்
வைப்பு நிதி மேகங்களில்...
நிதி ஈரப்பதம் குறைந்த நிலையில் உள்ளதாலும்..
ERP இம்சைக்காற்றின் திசை மாறிய வீச்சாலும்..
மழைப்பொழிவு தள்ளிப்போனதாக...
வைப்பு நிதி வட்டார இயக்குநர் 
FUND முருகன் தெரிவித்தார்.
 
மேலும் அவர் உளறுகையில்...
நம்பிக்கைதான் வாழ்க்கை என்றும்..
அவ்வாறு நம்பிக்கை இல்லாதவர்கள்..
ஜக்கம்மா காளியிடம்..
இது குறித்து..
குறி கேட்பது சாலச்சிறந்தது..
என்றும் தெரிவித்தார்...

இத்துடன் இம்மாத 
வைப்புநிதி வானிலை செய்திகள்
வருத்தமுடன் முடிவடைகின்றன..

1 comment:

  1. ஊழியர்கள் செய்த வேலைக்கு ஊதியத்தை குறித்த நேரத்தில் தராமல் வயிற்றில் அடிக்கும் இந்த கொடியர்வர்களும் மிருகங்களே

    ReplyDelete