Friday 9 January 2015

ஆர்ப்பாட்டம் விலக்கம் 

இன்று 09/01/2015 துணைப்பொதுமேலாளர்  நிர்வாகத்துடன் 
BSNLEU மற்றும்  NFTE  மாவட்டச்சங்கங்கள் நடத்திய 
பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 
இன்று மாலை நடைபெறவிருந்த 
ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  • ஜனவரி 21 அன்று GM அவர்கள் காரைக்குடி வந்து ஊழியர் பிரதிநிதிகளை சந்தித்து தேங்கியுள்ள பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
  • JCM, பணிக்குழு, நலக்குழு விரைவில் நடத்திட உத்திரவாதம் தரப்பட்டுள்ளது.
  • சுட்டிக்காட்டப்பட்ட ஊழியர் பிரச்சினைகள் உடனடியாக தீர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  • அவசர பிரச்சினைகள் எந்நேரமும் கவனிக்கப்படும் என்ற உறுதிமொழியும் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.

நல்ல நிர்வாகத்தில்...
ஊழியர் பிரச்சினைகள் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும்...
உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும்..
BSNL  வளர்ச்சிக்கான பணிகள் தடையின்றி நடக்க வேண்டும்..
தேவைப்படும் வழிகாட்டுதல்கள் திறம்பட தரப்பட வேண்டும்...

காரைக்குடியிலும் நல்ல நிர்வாகம் நடைபெறும் என்று நம்புவோம்...

No comments:

Post a Comment