Monday 29 December 2014

செய்திகள்

தேனியில் டிசம்பர் 27,28 தேதிகளில் 
AITUC  மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி வாழ்த்துரை வழங்கினார். 
தோழர்கள்.குருதாஸ் தாஸ்குப்தா, தா.பாண்டியன், 
இரா.நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

AITUC சார்பாக தர்மபுரி தோழர்.மணி, 
NFTE  சார்பாக தோழர்கள் SS.கோபாலகிருஷ்ணன்,காமராஜ், 
TMTCLU  சார்பாக தோழர் .செல்வம் 
ஆகியோர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். 
நமது இயக்க வழிகாட்டி தோழர்.சேது தலைமையில்
 மதுரை தோழர்கள். இலட்சம்,முருகேசன்,
 காரைக்குடி தோழர்கள்.சேக்காதர் பாட்சா,
லால் பகதூர்,தமிழ்மாறன், மாரி 
ஆகியோர் வரவேற்புக்குழுவில் பணியாற்றினர். 

தோழர்.TM.மூர்த்தி  தமிழ் மாநில AITUC 
பொதுச்செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 அவரது பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
========================================================
30/12/2014 அன்று சென்னையில் நடைபெற இருந்த NFTE 
தமிழ் மாநில செயற்குழு போக்குவரத்து ஊழியர்கள் 
வேலை நிறுத்தம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
=========================================================
அரசு ஊழியர்களின் வயதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் அத்தகைய கோரிக்கைகள் 
ஊழியர்கள்  பணிக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் மட்டுமே 
பரிசீலிக்கப்படும் என DOP  இலாக்கா உத்திரவிட்டுள்ளது.  

பிறந்த தேதி சேவைக்குறிப்பேட்டில்  தவறுதலாக எழுதப்பட்டு விட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, உரிய ஆவணங்களுடன் முறையீடு செய்தால் மட்டுமே இது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு திருத்தப்பட்ட பிறந்த தேதி ஓய்வுக்கு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பதவி உயர்வு போன்றவற்றிற்கு 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
==========================================================
2014-2015 நிதியாண்டில் வைப்புநிதிக்கு வட்டியாக தற்போதுள்ள 
8.75 சத வட்டி விகிதமே தொடரும் என  அரசு உத்திரவிட்டுள்ளது.
==========================================================

No comments:

Post a Comment