Sunday 14 December 2014

மனமகிழ் 
மதுரை மாவட்ட மாநாடு 

மதுரை மாவட்ட மாநாடு 13/12/2014 அன்று
 மதுரை பொதுமேலாளர் அலுவலக மனமகிழ்மன்றத்தில் 
தோழர்.முருகேசன் தலைமையில் 
 வந்தோர் மகிழ்ந்திட, 
கலந்தோர் களித்திட,
கேட்டோர் திகைத்திட,  
இனிதே  நடந்து முடிந்தது. 

பொதுமேலாளர் திருமதி.இராஜம், 
மூத்த வழிகாட்டி தோழர்.சேது, 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி,
மாநிலச்சங்க நிர்வாகிகள் மற்றும் 
தோழமை சங்கத்தலைவர்கள் 
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

இரு மனங்கள் இணங்கிப்பேசி  புதிய நிர்வாகிகள்
  ஒருமனதாக தேர்வாகினர். 
ஒரு மனதாக  தேர்வான நிர்வாகிகள் 
ஒரே மனதுடன் செயல்பட நமது வாழ்த்துக்கள். 

மாவட்டத்தலைவர் தோழர்.இராஜேந்திரன் TM,  தலைமையில் 
மாவட்டச்செயலர் தோழர்.சிவகுருநாதன், SSO, செயலாக்கத்தில் 
மாவட்டப்பொருளர் தோழர்.செந்தில்குமார், TM, நிதி ஊக்கத்தில் 
மதுரை மாவட்டச்சங்கம் வெற்றி நடை போடட்டும்...

மீன்கொடி மதுரையிலே..
காலையில் எழுந்து மாலையில் மறையும் 
கதிரவன் கொடி காலமெல்லாம் பறக்கும் நிலை மாற்றி... 
காலத்தால் அழியாத செங்கொடி 
சிவக்கொடி பறக்க வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment