Thursday 20 November 2014

கரையேறிய மீன்கள்...
நாடு திரும்பிய மீனவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் 

இனவெறி வலையில் சிக்கினார்கள்.. 
இலங்கைத்தீவில் துடித்தார்கள்...

கட்டுமரம் கண்டவனுக்கு...
தூக்குமரம் காத்திருக்க...

கை  விடப்பட்ட மீனவர்கள்...
கண்ணீரில் மிதந்த நிலையில்... 
தாமரை... இலையில்... மிதந்து 
தாய்நாடு சேர்ந்தார்கள்...

இனிதே கரை சேர்ந்த 
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு 
இனிய நம் வாழ்த்துக்கள்..

நடந்தது நாடகமாகவே இருந்தாலும்...
நடக்கட்டும் நாட்டில்... 
நல்ல நல்ல நாடகங்கள்...

No comments:

Post a Comment