Thursday 20 November 2014

நவம்பர் 27 வேலை நிறுத்தம் 
பேச்சுவார்த்தை 

நவம்பர் 27 அகில இந்திய வேலை  நிறுத்த அறிவிப்பையொட்டி 
NFTE மற்றும் BSNLEU சங்கங்களை இன்று 21/11/2014  
பேச்சுவார்த்தைக்கு BSNL நிர்வாகம் அழைத்துள்ளது. 

போராட்ட அறிவிப்பு JAC - கூட்டு நடவடிக்கைக்குழுவால் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு 
அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சங்கங்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது. 

மாறி வரும் சூழலில் இன்னும் BSNL  நிர்வாகம் 
மாறவில்லை என்பது தெளிவாகின்றது. 
ஒரு பகுதி ஊழியர்களை ஓரங்கட்டுவது 
அல்லது பிரித்தாளுவது என்பது புளித்துப்போன
 நிர்வாக நடவடிக்கையாகும். 

அனைவரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து 
தீர்வு காண்பதே நல்ல நிர்வாகத்திற்கு அழகாகும். 
BSNL நிர்வாகம் அழகானதா? 
அசிங்கம் பிடித்ததா?
 என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment