Tuesday 21 October 2014

தீப ஒளித்திருநாள்...
நல்வாழ்த்துக்கள்...

சீனாக்காரன் வைத்தான்..
சிவகாசிக்கே... வேட்டு...

சீனி வெடி வெடித்த இந்தியன் இன்று..
சீன வெடி வெடிக்கின்றான்..

உள்நாட்டு நரகாசூரன்..
உடன்பாடு போடுகின்றான்..
அயல்நாட்டு நரகாசூரனோடு..

வதம் செய்ய வேண்டிய 
இந்நாட்டு மன்னர்கள்...
தொலைந்து போனார்கள்...
தொலைக்காட்சியில்...

இங்கே.. 
வெளிச்சத்திற்கு வேலையில்லை..
இருளுக்குத்தான் இப்போது..மவுசு...

சூழும் இருள் விலக்கிட..
சூளுரைப்போம்... தோழர்களே..

அனைவருக்கும் 
இனிய 
தீப ஒளித்திருநாள் 
நல்வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment