Wednesday 15 October 2014

 ஜபல்பூர்
அகில இந்திய மாநாடு
 ஜபல்பூர் அகில இந்திய மாநாடு..
மாபெரும் தலைவர்கள் இல்லாத மாநாடு.
மரபு வழியில் அடியொற்றி நடந்த மாநாடு..
பிரமாண்ட மேடை அமைத்த மாநாடு...

முதியோர்கள் நிரம்பி நிற்க...
இளையோர்களும் இழையோடிய மாநாடு...
தர்க்கங்களைக் குறைத்து..
வெயில் தாக்கங்களைப்  பொறுத்து 
சார்பாளர்கள் சகிப்போடு நடந்த மாநாடு...

 வலி நிறைந்த இன்றைய அரசியலை
நம் வழிகாட்டி தோழர்.தார் 
உடல்வலி பொறுத்து 
அரசியல் வழி காட்டிய  மாநாடு...

தோழமை சங்கத்தலைவர்கள் 
நம் தோள் நிற்க தோழமை  சொன்ன மாநாடு..
 
 போனஸ் எங்கள் பாட்டன் சொத்து 
அதைப் போராடி மீட்டிடுவோம்..
என தோழர்கள் தோள் உயர்த்திய மாநாடு..

"இலாபத்தை அடைந்திடுங்கள்..
கோரிக்கையை வென்றிடுங்கள்.." என  
 CMDயும் தொழிலாளிகளைப் பார்த்து
கோரிக்கைகளை கதைத்த  மாநாடு...

சிந்தனைச்சிறகு விரித்து 
 மாநிலச்செயலர் பட்டாபி
 சிறப்பான உரை தந்த மாநாடு...

 மாற்றங்களும் பிரதிபலிக்க...
ஏமாற்றங்களும் எதிரொலிக்க...
மாறாத தலைமை தந்த  மாநாடு...
 
 நிர்வாகிகளுக்கு நிகராக..
சிறப்பு அழைப்பாளர்களை..
தேர்வு செய்த மாநாடு...
 
நிறுவனம் நிமிர்ந்திட ..
தொழிலாளர் உயர்ந்திட..
தீர்க்கமான தீர்மானங்களை 
தீவிரமாய் சிந்தித்து சொன்ன மாநாடு..
 
ஜபல்பூர் மாநாடு...
என்றும் மனதில் நிற்கும்...
நீங்காமல் நம் நினைவில் நிற்கும் ...

No comments:

Post a Comment