Monday 15 September 2014

செய்திகள் 

நாலுகட்டப்பதவி உயர்வு கணக்கில்  POST BASED PROMOTIONS எனப்படும் போட்டித்தேர்வு மூலம் அடையக்கூடிய பதவி உயர்வுகளும் தற்போது எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
 இது நியாயமற்ற செயலென்றும் இதனை மாற்ற நிர்வாகத்தை வலியுறுத்தக்கோரி தமிழ் மாநிலச்சங்கம் 
மத்திய சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
---------------------------------------------------------------------------------------
ஓய்வு பெறப்போகும் தோழர்களது ஓய்வூதிய விண்ணப்பங்கள்  
ஆறு மாதங்களுக்கு முன்பே  DOT CELLக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது ஓய்வூதிய விதி. எனவே 31/03/2015க்குள் ஓய்வு பெறப்போவோரின் விண்ணப்பங்கள் 26/09/2014க்குள் DOT CELL க்கு அனுப்பப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
ERP நடைமுறைப்படுத்தப்படும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் எழுந்துள்ளன. 
இதனை உடனடியாகக் களையுமாறு நிர்வாகத்தை
 மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
காஷ்மீர் வெள்ளத்தை முன்னிட்டு  21/09/2014 வரை இலவசமாக பேசுவதற்கும், SMS அனுப்புவதற்கும் BSNL வசதி செய்துள்ளது. 
BSNL ஊழியர்களின் பங்காக ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்யக்கோரி  நிர்வாகத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
MTNL - BSNL  இணைப்பு சூடு பிடித்துள்ளது. 
பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNLன் பங்குகளை திரும்ப பெறுவதா? 
அல்லது BSNL பங்குகளை விற்பனை செய்வதா? 
என்று  DOT தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------- 

No comments:

Post a Comment