Thursday 4 September 2014

செய்திகள் 

விழாக்காலம் நெருங்குவதால் உடனடியாக BSNL  ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3500/= போனஸ் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்திற்கு மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
25/09/2014 அன்று டெல்லியில் JCM தேசியக்குழுக்கூட்டம் 
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
BSNL  மற்றும் MTNL நிறுவனங்களின் இணைப்பை 
ஜூலை 2015க்குள் அமுல்படுத்த DOT  திட்டமிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA 
இணைப்பை உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
19/09/2014 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 
நடத்த AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் 
அறைகூவல் விடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு ஓய்வூதிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி ஓய்வு பெற்ற தோழர்களின் பணிக்கொடை GRATUITY  வழக்கு முடியும் வரை வழங்கப்படுவதில்லை. ஜார்க்கண்ட் மாநில அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இத்தகையதொரு வழக்கில்  பணிக்கொடையை நிறுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது எனவும், ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளில் 
பணிக்கொடை வழக்கம்போல் நிறுத்தப்படும் எனவும் 
BSNL நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

பணிக்கொடை என்பது ஓய்வு பெறும் ஊழியர்களின் உரிமை. 
இதில் வம்பு வழக்குகளுக்கு வேலையில்லை.
 தவறுக்குத்தண்டனை என்பது வேறு. 
ஆண்டாண்டு காலமாக பார்த்த பணிக்கு
 பணிக்கொடை வழங்குவது என்பது வேறு. 
மத்திய அரசின் ஊழியர் விரோதமான 
இத்தகைய  ஓய்வூதிய விதிகள் திருத்தப்பட வேண்டும். 

No comments:

Post a Comment