Sunday 28 September 2014

செய்திகள் 

BSNL  ஊழியர்களுக்குப் போனஸ் வழங்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மத்திய சங்கம் CMDக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் இந்த ஆண்டு உற்பத்தி திறனோடு இணைக்கப்படாத போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி உதவியாக BSNL  ஊழியர்கள் ஒருநாள் அடிப்படைச்சம்பளத்தை வழங்கக்கோரி CMD வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே நமது தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் சம்பளத்தைப் பிடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------------
2007க்குப்பின் பணியில் அமர்ந்த TTA தோழர்களின் சம்பளக்குறைப்பை 
சரி செய்யக்கோரி மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------
JTO போட்டித்தேர்வு வினாக்களில் கேட்கப்பட்ட  பல்வேறு குளறுபடிகளை சரி செய்யக்கோரி மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. ஏறத்தாழ இருபது மாதங்களாய் இப்பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------
ERP நடைமுறைப்படுத்தபட்ட பல்வேறு மாநிலங்களில் நடைமுறைச் சிக்கல்கள் வெகுவாக உருவாகியுள்ளன. மற்ற மாநிலங்களிலும்  ERP திட்டத்தை அமுல்படுத்தி மேலும் சிக்கலை உண்டாக்கும் முன்பு ERP திட்டக்குளறுபடிகளை சரிசெய்ய 
ஊழியர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------
AIBSNLPWA ஓய்வூதியர்கள் நலச்சங்கம் 
03/10/2014 அன்று சென்னையில் 
வேலை இல்லாத்திண்டாட்டத்தை 
எதிர்த்து போராட்டம் நடத்துகின்றது. 

No comments:

Post a Comment