Sunday 21 September 2014

பரவசம் தந்த.... பாரதி விழா
20/09/2014 அன்று காரைக்குடி 
BSNL  பொதுமேலாளர் அலுவலகத்தில்
விடுதலைக்கவி பாரதி விழா 
சிறப்புடன் நடைபெற்றது. 
இசையால், கவிதையால், உரையால் 
பாரதியின் புகழ் போற்றப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் 
நமது நன்றி உரித்தாகுக..
இதனிடையே...
சிறுமதி கொண்ட சிலர் 
பாரதி விழாவை
BSNL அலுவலகத்தில் நடத்தக்கூடாது 
என நிர்வாகத்தை நிந்திக்க...
சிந்திக்க திராணியற்ற ....
நிர்வாகம் நம்மிடம் மறுக்க...
பொறுக்க இயலாத நம் தோழர்கள்
போருக்கு கிளம்ப..
இறுதியில் விழா 
இனிதே நடந்தேறியது..


தடை தாண்டி வாழ்வதும்...
தடை தாண்டி வளர்வதும்...
நம் உதிரத்தில் ஊறியது..
அதுவே பாரதியிடம் நாம் கற்றது..

No comments:

Post a Comment