Wednesday 13 August 2014

நலிவடைந்த பொதுத்துறைகள் 
மீட்புக்குழு 
திரு.அருப் ராய் சௌத்ரி
CMD - NTPC 

நலிவடைந்த நிலையில் உள்ள பொதுத்துறைகளை
 நலிவு நிலையில் இருந்து மீட்டு  சீரமைப்பதற்காக மத்திய அரசு,  
சிறந்த நிர்வாகி என்று பெயர் பெற்றுள்ள 
NTPC நிறுவன CMD திரு.அருப் ராய் சௌத்ரி 
தலைமையில் மீட்புக்குழு அமைத்துள்ளது. 

குழு உறுப்பினர்களாக  நலிவடைந்த பொதுத்துறைகளில் இருந்து 
EXECUTIVE DIRECTOR செயல் இயக்குனர் தகுதியில் ஒருவரும், 
DPE/BRPSEயில் இருந்து ஒருவரும் உறுப்பினராக இருப்பார்கள். 

நலிவடைந்த பொதுத்துறைகளை மீட்க தேவைப்படும் நிதி ஆதாரங்களை வளமான நிலையில் இருக்கும் பொதுத்துறைகளிடமிருந்து பெற்று தனி நிதி அமைப்பு உருவாக்குவதற்கான சாத்தியங்களை குழு பரிசீலிக்கும். 

இரண்டு மாதங்களுக்குள் குழு அறிக்கை சமர்ப்பிக்க
 மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment