Wednesday 30 July 2014

நாட்டாமை

காரைக்குடி மாவட்டத்தில் JCM என்னும் 
கூட்டு ஆலோசனைக்குழு நடந்து 10 மாதங்கள் ஓடிவிட்டன. 
கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற அக்கறை 
நிர்வாகத்திற்கும் இல்லை.. 
ஊழியர் தரப்பு செயலருக்கும் இல்லை..

NFTE  சார்பில் போராட்ட அறிவிப்பு கொடுத்தபின்
காரைக்குடியை தற்போது கவனித்து வரும்
மதுரை மாவட்ட பொதுமேலாளர் 
25/07/2014 அன்று கூட்டம்  நடத்த அறிவிப்பு செய்தார்.
 கடந்த பத்து மாதங்களாக பிரச்சினைகளை சுமந்து வந்த நாம் தீர்க்கப்படாத, இழுத்தடிக்கப்படும் 24 பிரச்சினைகளை 
JCM ஊழியர் தரப்பு செயலரிடம் அளித்தோம். 
கூட்டம் நடந்த  அன்று முதலில் பழைய பிரச்சினைகளை விவாதித்தோம்.  பல பிரச்சினைகளை  மிக எளிதாக மதுரை மாவட்ட பொதுமேலாளர் தீர்த்து வைத்தார். பழைய பிரச்சினைகள் தீர்வுக்குப்பின்  டீயும், வடையும் கூடவே புதிய பிரச்சினைகள் பட்டியலும் வழங்கப்பட்டது. 
அதில் தேடிப்பார்த்தோம்... 

நாம் கொடுத்த எந்த பிரச்சினையையும் காணோம்...
கக்கூஸ் கழுவுதல், 
கக்கூஸ் கதவுக்கு தாழ்ப்பாள் போடுதல்..
கக்கூசிற்கு பினாயில் போடுதல் என்று
எல்லாப்பிரச்சினைகளும் 
கக்கூசை நோக்கியே இருந்தன...

NFTE  சங்கம் கொடுத்த பிரச்சினைகள் ஓன்று கூட இல்லை...
குறிப்பாக காரைக்குடியில் உள்ள காவேரி மருத்துவமனையை 
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற 
அனைவருக்கும் பொதுவான பிரச்சினையைக்கூட காணவில்லை..

இது பற்றி ஊழியர் தரப்பு செயலரிடம் கேட்டபோது
அவருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகவும்..

அவர்கள் 9 என்றும்..
NFTE 5தான் என்றும்..
எக்காளம்.. எகத்தாளம் செய்தார்..
சரிதான்.. 9.. 5... என்று 
எண்ணிக்கை பிரச்சினை வந்த பின்..
தொடர்ந்து JCMல் பங்கேற்பது 
நமது சுயமரியாதைக்கு இழுக்கு 
என்ற முடிவின் அடிப்படையிலும்...
புதிய பிரச்சினைகள் அனைத்திலும் 
கக்கூஸ் மணமே இருந்ததாலும்...
மனமும்... மணமும்... பொறுக்காமல்...
வெளிநடப்பு செய்து விட்டோம்...

NFTE சங்கம் கொடுக்கும் 
பிரச்சினைகளை முடக்குவதால்...
NFTE சங்கத்தை முடக்க முடியாது..

மதி கெடுக்கும் மந்தாரைகளின் ஆலோசணையால்.. 
ஒற்றுமைக்கு உலை வைக்கும் 
ஓய்வு மணிகளால்.. 
JCMன் சீரான  செயல்பாடு... 
காரைக்குடியில் சீரழிக்கப்பட்டுள்ளது...

இரண்டு சங்கங்கள் இணைந்து 
JCMல் பங்கேற்பதை 
மனதார வரவேற்றவர்கள் நாம் 
என்பதை யாரும் மறக்க.. மறுக்க  முடியாது...

"இணைப்பது இறைவன் வேலை..
பிரிப்பது சாத்தான் வேலை"..
என்று புனித  பைபிள் கூறுகின்றது.

எதிரிகள் பலம் மிகுந்து விட்டனர்.
பொதுவுடைமை போற்றும் தொழிலாளி வர்க்கம்
ஒன்றிணைந்து தங்கள் எதிரிகளை
இணைந்து சந்திக்க வேண்டிய காலமிது...

இப்போதைய தேவை 
இணைப்பா?... பிரிப்பா?..
உரியவர்கள் உரிய கவனம் 
செலுத்துவது  சாலச்சிறந்தது...

No comments:

Post a Comment