Tuesday 22 July 2014

செய்திகள் 

GPF இம்மாத இறுதியில்தான் பட்டுவாடா செய்யப்படும் என மத்திய சங்கம் கூறியுள்ளது.  இனிமேல் ஒவ்வொரு  மாதமும் சம்பளத்துடனே GPF என்பது உறுதி செய்யப்பட்டாலே போதுமானது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து விரல் தேய அவசியம்  இருக்காது.
============================================================
BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட தோழர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கு இரண்டு வயது ஆகிவிட்டது. இன்னும் நிர்வாகம் உத்திரவிடவில்லை. உரிய காலத்தே உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு 60 வயது ஆகுமுன் 
உடன்பாட்டிற்கு 60 வயது ஆகாமல் இருந்தால் சரி...
===============================================================
30/09/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து நிரந்தரம் ஆன தோழர்களின் 
TSM சேவைக்காலத்தில் பாதியளவு ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான குறிப்பு சேவைக்குறிப்பேட்டிலும் HRMS PACKAGE லும் இடம் பெற வேண்டும். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. 

காரைக்குடி மாவட்டத்தில் 2013ல் மரணமுற்ற
 தோழர்.ஜேசுதாஸ் என்பவரது குடும்ப ஓய்வூதியம் இத்தகைய குறிப்பு இல்லாத காரணத்தால் ஏறத்தாழ ஓராண்டு தாமதமாகியது 
என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
===============================================================
தேங்கிக்கிடக்கும் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 07/08/2014 அன்று 
நாடு தழுவிய கோரிக்கை நாள் 
கடைப்பிடிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
 JAC  அறைகூவல் விடுத்துள்ளது.
===============================================================
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் ஏறத்தாழ 28000க்கும் அதிகமான கூடுதல் செல் கோபுரங்களை இந்த ஆண்டு  நிர்மாணிக்கும் என 
இலாக்கா அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
==============================================================

No comments:

Post a Comment