Sunday 20 July 2014

இரங்கல் 

பள்ளத்தூர் தொலைபேசி நிலையத்தில் 
பணி புரிந்த
 தோழர்.செல்வராஜ் 
TM அவர்கள் 20/07/2014 
மாரடைப்பால் காலமானார். 

கல்வி கற்காத, சமூக மதிப்பில்லாத 
சமுதாயத்தில் பிறந்து 
உடல் உழைப்பை மட்டுமே 
மூலதனமாக கொண்டு 
தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்து 
அனுபவம் என்னும் கல்வி பெற்று 
பொருளாதாரத்தில் உயர்வுற்று 
சமூகத்தில் தலை நிமிர்ந்து 
மேலும் உயர்வு கொள்ளும் நிலையில் 
நிகழ்ந்துள்ள அவரது மரணம் 
நமக்குள் ஆழ்ந்த சோகத்தை 
உண்டாக்கியுள்ளது.

GM அலுவலகத்தில் பணிபுரிந்த 
தோழர்.சுப்பையா TSO இறந்து 
ஒரு வாரத்திற்குள் 
மேலும் ஒரு இறப்பு என்பது 
நமது தோழர்களிடையே 
அதிக துக்கத்தை உருவாக்கியுள்ளது. 

தோழர். செல்வராஜ் மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்...

No comments:

Post a Comment