Wednesday 25 June 2014

காரைக்குடி மாவட்டத்தில்
நிரந்தர ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களின் 
நீண்ட நாள் நிறைவேற்றப்படாத 
கோரிக்கைகளை வலியுறுத்தி 

NFTE - TMTCLU
இணைந்த  ஆர்ப்பாட்டம்

இன்று 26/06/2014 - வியாழன் 
மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்
 காரைக்குடி.

-:சிறப்பு பங்கேற்பு:-
தோழர். பழ.இராமச்சந்திரன் - AITUC 

குரல் உயர்த்தி கோரிக்கை சொல்வோம்..
கரம் உயர்த்தி உரிமைகள் வெல்வோம்..
வாரீர் தோழர்களே...


சிவகங்கை பகுதியில் 
இன்று வரை ஒப்பந்த ஊழியர்களுக்கு 
கூலி வழங்காத கொடுமையைக் கண்டித்து 

NFTE - TMTCLU 
இணைந்த ஆர்ப்பாட்டம்.

இன்று 26/06/2014 - வியாழன் 
மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் 
சிவகங்கை.

 பங்கேற்பு : தோழர்கள் 

P.இராமசாமி 
TMTCLU மாவட்டச்செயலர் 
S.முருகன் 
NFTE மாவட்டத்தலைவர் 
K.தமிழ்மாறன் 
NFTE மாவட்ட உதவிச்செயலர் 

உழைப்பவன் வியர்வை காயுமுன்னே 
கூலி கொடுக்கப்பட வேண்டும் என்றார்..
அண்ணல் நபிகள் நாயகம்..
இங்கோ.. தொழிலாளியின்  
வியர்வை காய்ந்து..
உதிரம் காய்ந்து...
உடலும் காய்ந்து.. 
உயிரும் காய்கின்றது....

மாதம் ஓன்று ஆனபின்னும்
ஒப்பந்தக்காரனுக்கும்...
ஒப்பேறாத நிர்வாகத்திற்கும்..
உடனடியாக கூலி கொடுக்க 
மனம் காய்கின்றது..

காய்ந்த வயிறுகளை ஈரமாக்க..
காய்ந்த மனங்களை...
எதிர்த்து களம் காண்போம்..
வாரீர்.. தோழர்களே... 

No comments:

Post a Comment