Tuesday 27 May 2014

நாடாளுமன்ற செயலகத்திடம் எழுப்பப்பட்ட 
SC/ST தோழர்களின் பிரச்சினைகள் 


நாடாளுமன்ற செயலகம் LOK SABHA SECRETARIAT 
SC/ST ஊழியர்களின் தீர்க்கப்படாத 32 பிரச்சினைகள் பற்றி DOTயிடம் கேள்வி எழுப்பியிருந்தது. நமது தமிழ்மாநிலச்சங்கம் BSNLலில் இன்னும் அமுல்படுத்தப்படாத இரண்டு முக்கிய  பிரச்சினைகளைப்பற்றி பாராளுமன்ற செயலகத்திடம் முறையிடுமாறு 
மத்திய சங்கத்தை கேட்டுகொண்டது. 

மத்திய சங்கமும் உடனடியாக இப்பிரச்சினையை 
பாராளுமன்ற செயலகத்திடம் முறையிட்டிருந்தது. 

தற்போது 20/05/2014 அன்று நமது சங்கம் எழுப்பியிருந்த இரண்டு கோரிக்கையின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 
நாடாளுமன்ற செயலகம் DOTயைக்கேட்டுக்கொண்டுள்ளது.

நமது சங்கம் எழுப்பிய பிரச்சினைகள்

1. நாலுகட்டப்பதவி உயர்வில் SC/ST  தோழர்களுக்கு  ஓராண்டு சலுகை.

2. கருணை அடிப்படை பணியில் மதிப்பெண்களில் தளர்வு.

உரிய நேரத்தில் SC/ST தோழர்களின் பிரச்சினைகளை 
உரிய இடத்தில் முறையிட்ட 
நமது மத்திய மாநில சங்கங்களுக்கு நன்றிகள்...

No comments:

Post a Comment