Sunday 18 May 2014

ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள் 
CGM உடன் சந்திப்பு 

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, TMTCLU மாநிலத்தலைவர் தோழர்.ஆர்.கே., TMTCLU மாநிலச்செயலர்  தோழர்.செல்வம்,  தோழர்கள்.தமிழ்மணி, முரளி,காமராஜ் ஆகியோர், 
 மே 17 தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தையொட்டி தமிழக முதன்மைப் பொதுமேலாளரை  
சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

 "ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தொழிற்சங்க வரையறைக்குள் வராது" என்ற வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், 
CGM பொறுமையுடன் நமது கோரிக்கைகளை செவிமடுத்துள்ளார். 
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் ஒப்பந்தக்காரர்கள் என்ற இடைத்தரகர்கள் இருந்தாலும், முதன்மை முதலாளி 
PRINCIPAL EMPLOYER என்ற முறையில் BSNLலில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபூர்வ சலுகைகளை உரிமைகளை அளிக்க வேண்டியது 
BSNL நிர்வாகத்தின் கடமையாகும். 
BSNL நிர்வாகம் தனது கடமையைச்செய்யும் என நம்புவோம். 
நாமும் ஒப்பந்த ஊழியருக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment