Tuesday 20 May 2014

எழுத்தரிலிருந்து...முதல்வர்..
பீகார்... புதிய முதல்வர்..
தோழர்.ஜித்தன் ராம் மஞ்சி 

பீகாரின் புதிய முதல்வராக 
தோழர்.ஜித்தன் ராம் மஞ்சி 
பதவியேற்றுள்ளார். 

அவரைத் தோழர் என்று அழைப்பது சாலப்பொருத்தமாகும். 
தோழர்.ஜித்தன் ராம் மஞ்சி மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். கல்வி கற்கவே அவர் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.  எனவே ஏற்றத்தாழ்வுகளை அகற்றும்  பொதுவுடைமைக்கொள்கையால் கவரப்பட்டு பீகாரில்  இந்தியப்பொதுவுடமைக்கட்சியில் தீவிரப்பணியாற்றினார். 

தனது பட்டப்படிப்பிற்குப்பின் தபால் தந்தித்துறையில் 
பீகார் கயாவில் உள்ள கோட்டப்பொறியாளர் தந்திப்பொறியியல் அலுவலகத்தில் எழுத்தராகப்பணியில் சேர்ந்தார். 

நமது NFPTE சங்கத்தின் மூன்றாம் பிரிவின் 
மாவட்டச்செயலராக தொழிற்சங்கப்பணி செய்தார்.

பின் தீவிர அரசியல் ஈடுபாட்டால் 1980ல்  
தனது பதவியை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 
தாழ்த்தப்பட்ட மக்கள் நல  இலாக்காவின் அமைச்சராகப்பணியாற்றி 
தற்போது அரசியல் சூழலால் முதல்வராக உயர்ந்துள்ளார்.
அவரது பணி சிறக்க வாழ்த்துவோம்.

1 comment: