Friday 16 May 2014

இந்தியா... வெல்லுமா?

இந்தியா வென்றது....
வெற்றி கிட்டியவுடன்... 
மோடி உதிர்த்த வார்த்தைகள் 
வரும் 60 மாதங்களில்....
சிறுபான்மையினர் சிரித்து வாழ்ந்தால்...
பெரும்பான்மையினர் பொறுத்து வாழ்ந்தால்...
தலித்துகள் தலை நிமிர்ந்து வாழ்ந்தால்....
பழங்குடியினர் பயமின்றி வாழ்ந்தால்...
விவசாயிகள் இயற்கையாக மரித்தால்..
தொழிலாளர்கள் துன்பமின்றி வாழ்ந்தால்...
அரசு ஊழியர் அச்சமின்றி  வாழ்ந்தால்..
கங்கையும் காவிரியும் இணைந்தால்..
பொதுத்துறைகள் வளர்ச்சி பெற்றால்...
இலஞ்சம்..ஊழல்...ஒழிந்தால்..
இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிந்தால்..
நிர்வாகத்தில் குறுக்குசால்  குறைந்தால்...
வறுமை ஒழிந்தால்... வளம் கொழித்தால்..
கேட்டவுடன் வேலை இளைஞனுக்கு கிடைத்தால்..
அம்பானி பிடியில் அமெரிக்க மடியில் சாயாதிருந்தால்...
அரசியலில் நேர்மையாளர்கள் நிமிர்ந்திருந்தால்...
ஐந்தாண்டுகள்  கழித்து நாமும் சொல்வோம்...
இந்தியா வென்றதென்று.....

அதுவரை பொறுத்திருப்போம்....
கொடுமை நேரின் எதிர்த்திருப்போம்....

No comments:

Post a Comment