Thursday 10 April 2014

இரங்கல் 

காரைக்குடி RSU  தொலைபேசி நிலையத்தில்
 காவலராகப் பணிபுரிந்த 
தோழர்.ஆரோக்கியசாமி 
10/04/2014 அன்று உடல் நலக்குறைவால் உயிர் நீத்தார். 

காலையில் பணி முடித்தார்.. 
மாலையில் காலன் அவர்தம் உயிர் முடித்தான். 
ஏறத்தாழ 15 ஆண்டுகள் காவலராக ஒப்பந்த முறையில் பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் பணி புரிந்தார். ஒப்பந்த ஊழியராக வாழ்ந்து உயிர் நீத்ததனால் ஒரு பலனும் அவரது  குடும்பத்தாருக்கு கிட்டாது. 

அவரது இறப்பை விட இதுவே பெருங்கொடுமை

"ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் 
அமுல்படுத்தப்பட வேண்டும்" 
என்பது காரைக்குடி சிறப்பு மாநாட்டுத்தீர்மானம். 

அது நிறைவேற்றப்படும் அன்றுதான் 
தோழர்.ஆரோக்கியசாமியின் 
ஆன்மா அமைதியடையும் . 

No comments:

Post a Comment