Monday 21 April 2014

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்..
வெறும் சோற்றுக்கு வந்ததிங்கே பஞ்சம்..


அரசியல்வாதிகள் தெருவையெல்லாம் 
ஆக்கிரமித்து விட்டதாலே..
கழைக்கூத்தாடிகளுக்கு.. இப்போது கஷ்டகாலம்..
குரங்காட்டிகளுக்கு கூடுதல் சிரமம்..

குஜராத்தில் ஓடுது.. குடம் குடமாக..
தேனும் பாலும்.. என்று படித்த சில  பாவிகள்..
உச்சி வெயிலில் உரக்கப்பேசியபோது 
வெயிலை விட மனசு தகித்தது..

குஜராத்தில் என்ன நடக்கின்றது..
சென்று வந்தோருக்குத்தெரியும்..

அன்றொரு நாள்.. குஜராத்தில்...
குரங்காட்டி ஒருவன் வித்தை காட்டிக்கொண்டிருந்தான்..
ஆனால் குரங்கில்லை.. 
அவனது குழந்தையைக் குரங்காக்கி வித்தைகளைச்செய்தான்..
நெருங்கிக்கேட்ட போது நொறுங்கி அவன் சொன்னான்..
குரங்கு வளர்க்கும் செலவில் 
என் குழந்தையை வளர்த்து விடுவேன்"  என்று..
இதுதான் அன்றும் .. இன்றும் ..குஜராத்

மோடிக்களின் காலத்திலே..
முஸ்லிம்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டியது.. 

மோடிக்களின் காலத்திலே
இரயில் எரிந்தது..
வயிறு எரிந்தது..
அடுப்பு மட்டும் எரியவே இல்லை...

அதன் சாட்சிதான் நீங்கள் மேலே காணும் படம்..
எத்தனையோ சின்னங்கள் இந்த தேசத்தில் உண்டு..
இது நம் தேசத்தின் அவமானச்சின்னம்..

சிந்திப்போம்...
அவமானச்சின்னங்களை ஒழிப்போம்...
தன்மானச்சின்னங்களை வளர்ப்போம்...

No comments:

Post a Comment